செஞ்சிக் கோட்டை ( GINGEE FORT )
செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள மிகச் சில கோட்டைகளுள் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மராட்டிய மன்னரான சிவாஜி இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் EASTERN TROY என்று அழைத்தனர். முகலாயர்கலால் பாதுஷாபாத் என்றும், சோழர்கலால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள், 12 கிலோமீட்டர் நீளமுள்ள மதில் சுவர்கள் இணைந்து முக்கோண வடிவமாக அமைந்துள்ளது. பல போர்களை சந்தித்த பிறகும் இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது சோழர் காலத்தில் செஞ்சி சிங்கபுரி என்றும் சிங்கபுரி கோட்டம் என்றும் அழைத்தனர்.அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது
இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் இருந்த பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. செஞ்சிக்கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் சஞ்சயன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த ஆனந்தக் கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றைக் கூறும் மெக்கன்சி சுவடிகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளது. செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான அகலமான அகழிகள் போன்றவை தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளது. செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது . இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது 240 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த கோட்டை 24 மீட்டர் அகலமுள்ள அகளிகளில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
செஞ்சிக் கோட்டை எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் போன்றவற்றை கொண்டது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்று உள்ளது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணி கோட்டை சந்திரகிரி ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களில் மூடப்பட்டிருந்தன ராஜகிரியில் போர் முற்றுகை காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவை பாலம் ஒன்று உள்ளது. போர்க்காலத்தில் கோட்டை காவலர்கள் இந்தப் பாலத்தை அகற்றிவிடுவர், அப்போது எதிரிகள் உள்ளே வரமுடியாமல் தடுக்கத்தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படையெடுப்புகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டு விட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது
Comments
Post a Comment