செஞ்சிக்கோட்டையின் பேரழகு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. கற் குன்றுகளின் மீது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செஞ்சி கோட்டை ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல மன்னர்களின் ஆட்சி காலத்தில் சிறந்து விளங்கியுள்ளது. செஞ்சிக் கோட்டையில் உள்ள மிகப் பெரிய மதில்கள், தானியக் களஞ்சியங்கள், குளம் உள்ளிட்டவை காண்போரை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. யானைக்குளம்: கல்யாண மகால்: இது இந்தோ இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டிருக்கும் மேற்புறத்தில் பிரமிடு போன்ற அமைப்பு உள்ளது. இது பார்க்க மிக அழகாக இருக்கிறது மற்றும் இது பார்வையாளர்களின் இதயங்களை ஈர்க்கிறது. இதன் கட்டமைப்பு மிக அற்புதமாக உள்ளது, கல்யாண மகால் என்றழைக்கப்படும் கோட்டையின் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன அங்குள்ள ஒவ்வொரு தளத்திற்கும் சரியான வழியில் சென்றால் மட்டுமே அடைய முடியும் அந்த அளவிற்கு வழிகள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. செஞ்சிக் கோட்டையில் உள்ள ராஜகிரி கோட்டையை ராஜா கோட்டை என்றும் கிருஷ்ணகிரி கோட்டையை ராணி ...