Posts

Showing posts from March, 2020

செஞ்சிக்கோட்டையின் பேரழகு

Image
          விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. கற் குன்றுகளின்  மீது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செஞ்சி கோட்டை ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல மன்னர்களின் ஆட்சி காலத்தில் சிறந்து விளங்கியுள்ளது. செஞ்சிக் கோட்டையில் உள்ள மிகப் பெரிய மதில்கள், தானியக் களஞ்சியங்கள், குளம் உள்ளிட்டவை காண்போரை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. யானைக்குளம்: கல்யாண மகால்:        இது இந்தோ இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டிருக்கும் மேற்புறத்தில் பிரமிடு போன்ற அமைப்பு உள்ளது. இது பார்க்க மிக அழகாக இருக்கிறது மற்றும் இது பார்வையாளர்களின் இதயங்களை ஈர்க்கிறது. இதன் கட்டமைப்பு மிக அற்புதமாக உள்ளது,  கல்யாண மகால் என்றழைக்கப்படும் கோட்டையின் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன அங்குள்ள ஒவ்வொரு தளத்திற்கும் சரியான வழியில் சென்றால் மட்டுமே அடைய முடியும் அந்த அளவிற்கு வழிகள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. செஞ்சிக் கோட்டையில் உள்ள ராஜகிரி கோட்டையை ராஜா கோட்டை என்றும் கிருஷ்ணகிரி கோட்டையை ராணி ...

செஞ்சி அமைவிடம் ( location of gingee )

Gingee, Tamil Nadu, India Geographic Information: Country India State Tamil nadu District Villupuram Taluk Gingee Taluk Latitude 12.252576 Longitude 79.416924 Postal code 604202 Landline code 04145 அமைவிடம்  ( Location of  Gingee) :       செஞ்சி திண்டிவனத்தில் இருந்து மேற்கு திசையில் 29 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புனிதத் தலமான திருவண்ணாமலையிலிருந்து கிழக்கு திசையில் 39  கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைநகரான விழுப்புரத்தில் இருந்து வடக்கு திசையில் 38 கிலோமீட்டர் தொலைவிலும்,  சேத்பட் டில்   இருந்து தெற்கு திசையில் 29 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 157 கிலோமீட்டர் தொலைவில் இந்த செஞ்சி நகரம் அமைந்துள்ளது..

செஞ்சிக் கோட்டை ( GINGEE FORT )

Image
             செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள மிகச் சில கோட்டைகளுள் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  மராட்டிய மன்னரான சிவாஜி இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் EASTERN TROY என்று அழைத்தனர். முகலாயர்கலால் பாதுஷாபாத் என்றும்,  சோழர்கலால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள், 12 கிலோமீட்டர் நீளமுள்ள மதில் சுவர்கள் இணைந்து முக்கோண வடிவமாக அமைந்துள்ளது. பல போர்களை சந்தித்த பிறகும் இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது சோழர் காலத்தில் செஞ்சி  சிங்கபுரி என்றும் சிங்கபுரி கோட்டம் என்றும் அழைத்தனர்.அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது         இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது,  அது செஞ்சி அந்த காலத்தில் இருந்த ...